வியாழன், ஜூலை 01, 2010

தேடல்

வசந்தம் விடை பெற்று விட்டது
கண்மணி!
அதன் சுவடுகளைத் தேடி
அலைவதொன்றே சுகமாய் ........
நினைவிருக்கிறதா ?
இந்த சரக்கொன்றை மரக்கூட்டம்
பூத்து விரித்த மலர் பாதையில்
மௌனித்திருந்தே
நாம் கரைத்த யுகங்களை ?
உன்
கண்ணோரத்தில் ஈரம்.....
கனியதழில் ஈரம் ....
நெஞ்சில்..... நினைவில் ......
நெகிழும் காற்றில் ....
எங்கும் ஈரம் ...
நினைவிருக்கிறதா ?
இன்றோ ,
உலைக்களனாய்
உள்ளம் கக்கும் அனல் கங்குகள் .
ஈரம் இந்நாளில் இறந்த காலமடி!
நான்
இப்போதும் மௌனித்திருக்கிறேன்.
தனிமையில்
வசந்தத்தின் சுவடுகளைத்
தேடிக்கொண்டு....
வசந்தம் மீண்டும் வரலாம் ,
ஆனால் நீ?

1985