வெள்ளி, ஜூலை 09, 2010

பைத்தியம்

பாவம்ப்பா... அவன் பைத்தியமா?
விரல் பிடித்து வினவும் மகன்..

யாரில்லை பைத்தியம்?
நானில்லையா? நீயில்லையா? யாரில்லை?

பலருக்கு பணம்.
சிலருக்கு பதவி.
சிலருக்குப் பொன்.
பலருக்குப் பெண்.
உனக்கு கிரிக்கெட்.
எனக்கு கவிதை.

எல்லோர்க்குமிங்கே
ஏதோவொன்றில் பைத்தியம்.....

எதன்மீதும் ஏதுமில்லாத அவனையோ ,

கூசாமல்

பைத்தியம் என்கிறார்கள்.


(கல்கத்தா 1988)

1 comments:

vidhyaavenkat சொன்னது…

very nice.